வட இந்தியாவில் தமிழ்நாடு பற்றி திட்டமிட்டு சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர்
தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளர்.
திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஆகஸ்டு மாதம் 13ந் தேதி சென்னையில் லிபர்டி மாரத்தான் நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள பதிவு, டி.சார்ட் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொல்.திருமாவளவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இளைய சமூதாயத்திடம் மாரத்தான் மிகவும் பிரபலாகி வருவதாக கூறினார். வட இந்தியாவில் சமூக வலைதளங்களில், திமுக அரசு, இந்துகளுக்கு எதிரானது, கோவில்கள் இடிக்கப்படுவதாக தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாக தெரிவித்தார்