தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலத்தால் ஆன நாய், மான் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் இதுவரை 85க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம் என ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் அகழாய்வு பணியில் மேலும் அதிசயமாக வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவம், இரும்பு வாள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது