தற்போதைய செய்திகள்

சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்திய உப்புமா... அமைச்சர் துரைமுருகனின் டைமிங் காமெடி

தந்தி டிவி
• மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், அதிமுக தொடுத்த மாலையில் உதிர்த்த பூக்களை எடுத்து புதிதாக கட்டப்பட்ட மாலை தான் திமுகவின் வேளாண் பட்ஜெட் என்றார். • மேலும், ஏற்கனவே இருந்த இட்லியை உதிர்த்து உப்புமா கிண்டி கொடுத்திருப்பதாகவும் ஓ எஸ் மணியன் பேசினார். • இதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஏதோ உப்புமா என்கிறீர்கள், அது ரவா உப்புமாவா, அரிசி உப்புமாவா, கோதுமை உப்புமாவா என கிண்டலாக பேசினார். • உடனடியாக குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், மணி ஒன்று ஆகிவிட்டது, இந்த நேரத்தில் இட்லி, உப்புமா பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தால், பசி தான் ஏறும் என்பதை புரிந்து கொண்டு பேசுங்கள் என்றதும் அவை முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்