தற்போதைய செய்திகள்

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தந்தி டிவி

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 110 ரூபாய் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு ராபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு110 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு குவிண்டால் கோதுமையின் விலை 2,015-இல் இருந்து 2,125-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, பார்லியின் விலை 100 ரூபாயும், கடுகு விலை 400 ரூபாயும், கடலை விலை 105 ரூபாயும், மிக அதிகபட்சமாக மசூர் பருப்பின் விலை 500 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை