தற்போதைய செய்திகள்

சிவனுக்கு அபிஷேகம் செய்த மெகபூபா முப்தி.. "அரசியல் நாடகம்" என பாஜக விமர்சனம் - சூட்டோடு சூடாக பதிலடி தந்த முப்தி

தந்தி டிவி
• ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சிவன் கோவிலுக்கு சென்ற முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சாமி தரிசனம் செய்தார். • கருவறைக்குள் சென்றவர் சிவனுக்கு அபிஷேகம் செய்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டது. • மறுபுறம் ஆட்சியிலிருந்தபோது அமர்நாத் வாரியத்திற்கு நிலம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்தவர் மெகபூபா எனக் குற்றம் சாட்டிய, பாஜக செய்தி தொடர்பாள ரன்பீர் சிங் பதானியா, மெகபூபா இப்போது கோவிலுக்கு சென்றிருப்பது எல்லாம் அரசியல் நாடகம் என விமர்சனம் செய்தார். • இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த மெகபூபா, தனது மதம் குறித்து தனக்கு நன்றாக தெரியும், தனக்கு விருப்பம் இருக்கும் இடத்திற்கு செல்வது தனது உரிமை எனவும் தெரிவித்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி