விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது. வேலாகுளம் கிராமத்தில், இடி, சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டி மழை காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த காட்சிகளை, அப்பகுதியை சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்