தற்போதைய செய்திகள்

மேயர் பிரியா சொன்ன அதிரடி தகவல்

தந்தி டிவி

சென்னையில் கனமழை பெய்து வருவதால், ஒவ்வொரு பகுதிக்கும் கொசுவலைகள் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை திருவிக நகர் பகுதியில் உள்ளவர்களுக்கு விலையில்லா கொசுவலைகளை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர், இரண்டரை லட்சம் கொசு வலைகள் தயாராக இருப்பதாகவும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கொசுவலைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மாநகராட்சி துரிதமாக செயல்பட்டதால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்று குறிப்பிட்ட மேயர், சாலையோரம் வசிக்கும் 15 ஆயிரம் பேருக்கு மாநகராட்சி சார்பில் உணவு அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்