சுதந்திர போராட்ட தியாகி மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் என்.சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அக்கட்சியின் நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் என பலரும் குரோம்பேட்டை பகுதியில் உள்ள என்.சங்கரய்யாவின் இல்லத்தில் அவரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்.