தற்போதைய செய்திகள்

மணிப்பூரில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு

தந்தி டிவி

வன்முறையால் பாதிக்கப்பட்ட, மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அதன்படி, மாநிலம் முழுவதும் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை, இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பிரேன் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது, மைதேய் மற்றும் குக்கி சமூக‌ங்களால் அமைக்கப்பட்ட அனைத்து பதுங்கு குழிகளையும் அகற்ற முடிவு எடுக்கப்பட்டது. விவசாயப் பணிகள் தடையின்றி தொடர, விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவது என்றும், ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டது.

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்

Breaking | MNM | KamalHaasan | கமல் எடுக்க போகும் முடிவு.. மநீம அவசர ஆலோசனை