தற்போதைய செய்திகள்

மங்களூரு வெடி விபத்து சம்பவம்: வீட்டிலேயே வெடி குண்டு தயாரித்த ஷரீக்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தந்தி டிவி

மங்களூரு வெடி விபத்து தொடர்பாக, ஷாரிக் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டம் மற்றும் கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற ஷாரிக் என்பவர், படுகாயமடைந்த நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஷாரிக் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டம் மற்றும் கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், அவர் கடந்த 2 ஆண்டுகளில் 4 செல்போன் எண்களை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாரிக்கிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர். ஷாரிக் வாடகை எடுத்து தங்கியிருந்த வீட்டிலிருந்து வெடிகுண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவை அனைத்தும் தடவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ