தற்போதைய செய்திகள்

மங்களூரு வெடி விபத்து சம்பவம்: வீட்டிலேயே வெடி குண்டு தயாரித்த ஷரீக்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தந்தி டிவி

மங்களூரு வெடி விபத்து தொடர்பாக, ஷாரிக் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டம் மற்றும் கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற ஷாரிக் என்பவர், படுகாயமடைந்த நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஷாரிக் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டம் மற்றும் கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், அவர் கடந்த 2 ஆண்டுகளில் 4 செல்போன் எண்களை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாரிக்கிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர். ஷாரிக் வாடகை எடுத்து தங்கியிருந்த வீட்டிலிருந்து வெடிகுண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவை அனைத்தும் தடவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்