பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், உபரிநீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்திற்கு, நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதன் காரணமாக, பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு, வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியில் இருந்து, 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே, கொசஸ்தலை கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.