தற்போதைய செய்திகள்

அரசுப்பேருந்து ஓட்டுநரை கன்னத்தில் அறைந்த மேலாளர் - வெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

புதுக்கோட்டையில், அரசுப் பேருந்து ஓட்டுநரை, கிளை மேலாளர் கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழகத்தில் நிஜார் முகமது என்பவர், கடந்த 5 ஆண்டுகளாக ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சரிவர பணியாற்றவில்லை எனக்கூறி, அவரை பணிமனைக்கு அழைத்த கிளை மேலாளர் அருண்குமார், தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் அறைந்து கீழே எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து, சக பணியாளர்கள் நிஜாம் முகமதுவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பணியாளர்களை கூடுதல் பணி செய்ய வற்புறுத்துவதாகவும், விடுமுறை இன்றி வேலைக்கு வர கிளை மேலாளர் வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்