சென்னையில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், மெட்ரோ ரயில் மூலம் தேனாம்பேட்டை பகுதிக்கு வந்து ,சாலையில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்த போலீசார், குரோம்பேட்டையைச் சேர்ந்த உதய சரவணனை கைது செய்தனர்...