தற்போதைய செய்திகள்

"கல் எறிந்தவர்களை பாதுகாக்கும் மம்தா" - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அட்டாக்

தந்தி டிவி

இன்னும் எத்தனை காலத்திற்கு இந்து சமூகம் மீது தாக்குதல் நடத்துவீர்கள்? என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்....

ராம நவமி யாத்திரையின்போது ஏற்பட்ட கலவரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார். நீதி வழங்க வேண்டிய முதலமைச்சர், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு கல் எறிந்தவர்களை பாதுகாப்பதாக குற்றம்சாட்டிய அவர், இது மம்தா பானர்ஜி ஆட்சியில் முதல்முறையாக நடந்த நிகழ்வு அல்ல என்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற லட்சுமி பூஜையின்போதும் பட்டியலினத்தவர்கள் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அந்த நேரத்திலும் மம்தா மவுனம் காத்ததாக குற்றம்சாட்டினார்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"