தற்போதைய செய்திகள்

"உயர் நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன்?" - மத்திய தொல்லியல் துறைக்கு ஹைகோர்ட் கேள்வி

தந்தி டிவி

சென்னை உயர் நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன் என்று மத்திய தொல்லியல் துறைக்கு, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், புராதன சின்னங்கள், கட்டிடங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என, அதிருப்தி தெரிவித்தது.

10 ஆண்டுகள் ஆகியும் சென்னை கன்னிமாரா நூலக சீரமைப்பு பணிகள் முடிக்கப்படவில்லை எனவும், உயர் நீதிமன்ற கட்டிடம் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என பலமுறை நினைவூட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியது. இதனிடையே, போதுமான பணியாளர்கள் இல்லை என்று, தொல்லியல் துறையில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், மத்திய தொல்லியல் துறையில் எத்தனை பணியாளர்கள் உள்ளனர்?, பணிகளை முடிக்க எவ்வளவு கால அவகாசம் வேண்டும்? என கேள்வி எழுப்பி, வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை