தற்போதைய செய்திகள்

மகாளய அமாவாசை - திதி கொடுத்து வழிபாடு - புனித நீர்நிலைகளில் நீராடி பிரார்த்தனை

தந்தி டிவி

மகாளய அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள புனித நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

மகாளய அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமானோர் திதி கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

குற்றாலம் மெயின் அருவி கரையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

பின்னர் அருவியில் நீராடி பிரார்த்தனையை நிறைவு செய்தனர்.

கடலூர் சில்வர் பீச் மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த அவர்கள் பின்னர் நீர் நிலைகளில் நீராடினர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டு பின்னர் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்