தற்போதைய செய்திகள்

திருமணத்துக்கு செல்லும் வழியில் திடீரென வெடித்த வேன் டயர் - 3 சிறுவர்கள் பரிதாப பலி.. 20 பேர் கவலைக்கிடம்

தந்தி டிவி

மதுராந்தகம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த படூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக, பெண் வீட்டார் ஏற்பாடு செய்திருந்த மினிவேனில் சுமார் 25 பேர் சென்னை வந்தனர்.

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில், மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி அருகே சென்று கொண்டிருந்தபோது, டயர் வெடித்ததில், மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், ஒரு சிறுமி, 2 சிறுவர்கள் என 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

மற்றவர்கள், மதுராந்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை