தற்போதைய செய்திகள்

+2 தேர்வில் 100-க்கு 138...514 எடுத்தும் Fail - அதிர்ச்சியில் மதுரை மாணவி

தந்தி டிவி

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு தமிழில் நூற்றுக்கு138 மதிப்பெண் என முடிவு வந்ததால், குழப்பம் அடைந்துள்ளார்.மதுரை மாவட்டம் சூரக்குளம் பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்னும் மாணவி, திருமங்கலம் பிரான்சிஸ் பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். நேற்று முடிவு வெளியான நிலையில் தேர்வு முடிவு பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் தமிழில் நூற்றுக்கு 138 மதிப்பெண்களும், இயற்பியலில் 71 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 92 மதிப்பெண்களும், கணிதத்தில் 56, வேதியியலில் 71 மதிப்பெண்களும் பெற்றுள்ளதாக முடிவு வெளியாகி உள்ளது. 3 பாடங்களில் அதிக மதிப்பெண் இருந்தும், பட்டியலில் தேர்ச்சி பெறவில்லை, faill என்று வந்துள்ளது. 600 க்கு 514 மதிப்பெண்கள் எடுத்துள்ளபோதும், மூன்று பாடங்களில் தோல்வி என்று வந்துள்ளதால், அடுத்து என்ன செய்வதென்றும் தெரியாமல் மாணவி தவித்து வருகிறார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்