தற்போதைய செய்திகள்

உயிர் காவு வாங்கிய ஷேர் மார்க்கெட்.. லட்சத்தில் பணத்தை இழந்த இளைஞர்.. - விரக்தியில் விபரீத முடிவு!

தந்தி டிவி
• மதுரையில், ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த இளைஞர், விரக்தியில் 50 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். • அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. • கோவையில், நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஜெகதீஷ், தனது நண்பரான பிரகாஷ் என்பவரிடம் இருந்து, நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தால், இரட்டிப்பாக தருவதாகக் கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார் • . பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த நிலையில், அந்தப் பணத்தை மீட்டெடுக்க முடியாத நிலையில், ஜெகதீஷ் தவித்து வந்துள்ளார். • பணம் கொடுத்த பிரகாஷ், பணத்தை திரும்பப் பெற முடியாத நிலையில், இதுதொடர்பாக காவல்நிலையைத்தில் புகார் அளித்துள்ளார். • இந்த நிலையில், பணத்தை கொடுக்க முடியாமல் விரக்தியில் இருந்து வந்த ஜெகதீஷ், 50 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். • இதனை அறிந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் உயிரிழந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை