விக்கிரமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடியதாக கூறி, இளைஞர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அரியலூர் மாவட்டம் விக்கரமங்கலம் அருகே சேலத்தான் காடு பகுதியை சேர்ந்தவர் தனுஷ்.
இவர், சந்திரா பாளயத்தை சேர்ந்த சகாதேவன் என்பவரின் இரு சக்கர வாகனத்திலிருந்து இரவில் பெட்ரோலை திருடியதாக கூறி தனுஷை மரத்தில் வைத்து அடித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சகாதேவன் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.