மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே, 30க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், திடீரென ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில், மாணவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் இருக்க ஆசிரியர்கள், பெற்றோர் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.