தற்போதைய செய்திகள்

பட்ட பகலில் பைக்கில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி சாய்த்த கும்பல்.. மதுரையில் அதிர்ச்சி!

தந்தி டிவி

மதுரையில், மர்மநபர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இருந்த இளைஞரை மீட்டு, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான விசாரணையில், உயிரிழந்த நபர் கோவையில் கண்ணாடி கடையில் வேலை பார்த்து வந்த சரவணகுமார் என்பதும், விடுப்பு எடுத்து மதுரைக்கு வந்ததும் தெரியவந்தது. இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்