தற்போதைய செய்திகள்

மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் கைது.. பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார்

தந்தி டிவி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் உளவியல் துறை பேராசியராக பணியாற்றி வரும் கருப்பையா, அங்கு பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைகழகத்தில் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது இதனையடுத்து, மதுரை சரக டிஐஜி பொன்னியை சந்தித்து புகார் அளித்தனர். அதன் பேரில், மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் கருப்பையாவை கைது செய்து, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்