தற்போதைய செய்திகள்

பணத்திற்காக கார் விற்பனையாளர் கடத்தல்... ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்

தந்தி டிவி
• பணத்திற்காக கார் விற்பனையாளரை கடத்திய அவரது நண்பர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். • மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாதீன். பழைய கார்களை வாங்கி விற்பனை செய்துவரும் இவர், தனது நண்பரான ஆத்திக் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்று திருப்பி அளிக்காமல் காலம் தாழ்த்திவந்ததாக தெரிகிறது. • இந்நிலையில் கடந்த 13ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த சகாதீனை, ஆத்திக்கின் நண்பர்கள் கத்தியை காட்டி, காரில் கடத்திச் சென்று, அவரது மனைவியிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். • இதனைத் தொடர்ந்து அவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கணவரை மீட்ட நிலையில், தன்னை கடத்தியதாக சகாதீன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். • இந்த நிலையில், ஆத்திக் உட்பட நான்கு பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்