தற்போதைய செய்திகள்

தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவர், அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை முறைப்படுத்துவதற்கான விதிகளை வகுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசின் சுகாதார காப்பீட்டு திட்டங்களின் கீழ் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிப்பது தொடர்பாக, கண்காணிப்பு நடைமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதுதொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், அற்ப காரணங்களுக்காக காப்பீட்டு கோரிக்கை தொகை வழங்காவிட்டால், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி