தற்போதைய செய்திகள்

மதுவந்தி வீட்டை விற்றதால் அதிர்ச்சி - நிதி நிறுவனம் மீது பரபரப்பு புகார்

தந்தி டிவி

சென்னையில் தனியார் நிதி நிறுவனத்தினர் மீது நடிகை மதுவந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான மதுவந்தி, கடந்த 2016 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், சுமார் ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடனை சரியாக கட்டவில்லை என கூறி, நீதிமன்றத்தின் உதவியுடன் மதுவந்தியின் வீட்டை நிதி நிறுவனத்தினர் பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து, வீட்டில் உள்ள பொருட்களை மதுவந்தி எடுக்க தாமதமானதால் வீட்டு பொருட்களை எடுத்து நிதி நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் வைத்து வீட்டை விற்றுள்ளனர். இந்நிலையில், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், தனக்கு தெரியாமலே பொருட்களை எடுத்து வைத்து வீட்டை விற்றுள்ளதாக கூறி நிதி நிறுவனத்தினர் 10 பேர் மீது மதுவந்தி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு