தற்போதைய செய்திகள்

மண்ணில் புதைந்து கிடந்த சிவலிங்கம், நந்தி சிலைகளை தோண்டி எடுத்த மக்கள்

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே மண்ணில் புதைந்திருந்த பழமை வாய்ந்த சிவலிங்கம் மற்றும் இரண்டு புலிக்குத்தி நடு கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சத்தியமங்கலத்தை அங்கண கவுண்டன்புதூர் கிராமத்தில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிவலிங்கம் சிலை, புலிக்குத்தி நடுகற்கள், நந்தி சிலைகள் மண்ணில் புதைந்த நிலையில் கிடப்பதாக, கோவையைச் சேர்ந்த அரண்பணி அறக்கட்டளைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு வந்த அறக்கட்டளை குழுவினர், கிராம மக்கள் உதவியுடன் மண்ணில் புதைந்து கிடந்த சிவலிங்கத்தையும், இரண்டு புலிக்குத்தி நடு கற்களையும் தோண்டி எடுத்து, மரத்தடியில் பீடம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டுக்கு கொண்டு வந்தனர்.

பழங்காலத்தில் கால்நடைகளை வேட்டையாட வந்த புலிகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக இந்த நடுகற்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று அறக்கட்டளை குழுவினர் கூறுகிறார்கள்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை