தற்போதைய செய்திகள்

"2 நிமிஷத்துல உசுர எடுத்துட்டாங்க.. 2 குழந்தையும் அனாதை ஆகிடுச்சு" - நடுரோட்டில் கதறும் பெண்

தந்தி டிவி

சேலத்தில், கணவரை கொலை செய்த 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பெண் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த லோகேஸ்வரன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கொலையாளிகளை கைது செய்யக்கோரி, உயிரிழந்தவரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. லோகேஷ்வரனை கொலை செய்த 3 பேரை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு