தற்போதைய செய்திகள்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், ஊதியூர் மலை பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.

தந்தி டிவி
• ஊதியூர் மேற்கு பகுதியில் கடந்த 3-ந் தேதி செம்மறி ஆடு ஒன்றையும், நேற்று முன்தினம் ஆனைக்கல் தோட்டம் பகுதியில் கன்றுகுட்டி ஒன்றையும் சிறுத்தை அடித்து கொன்றது. • இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். • சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வனத்துறையினரும் உறுதி செய்துள்ளனர். • இதையடுத்து, சிறுத்தை நடமாட்டத்தை அறிய, 7 இடங்களில் கண்காணிப்புக் கருவியை பொறுத்தியுள்ளனர். • மேலும், கூண்டு வைத்தும் சிறுத்தையை பிடிக்க திட்டமிட்டுள்ளனர். • இதனிடையே, மறு அறிவிப்பு வரும் வரை மாலை 4 மணிக்கு மேல், மலையில் உள்ள கோவில்களுக்கு யாரும் செல்லக்கூடாது என பொதுமக்களுக்கு வனத்துறையின்ர எச்சரிக்கை விடுத்துள்ளனர். • மேலும், ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகளும் வைத்துள்ளனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே