தற்போதைய செய்திகள்

விபத்தை தடுக்க Latest Technology..தண்ணியடித்து எழுப்பும் போலீஸ்

தந்தி டிவி

கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து வருகின்றன... இதனால் மலை பாதையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க தேவஸ்தான நிர்வாகத்துடன் இணைந்து திருமலை போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்... அதன்படி, மலையில் வாகனம் ஓட்டி வரும் ஓட்டுநர்கள் முகத்தில் தண்ணீர் அடித்து போலீசார் அனுப்பி வைக்கின்றனர். இதற்காக திருப்பதி மலையில் உள்ள ஜிஎன்சி டோல்கேட்டில் ஸ்பிரேயுடன் காத்திருக்கும் போலீசார், வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களுக்கு முகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து புத்துணர்வு பெற செய்து வழி அனுப்பி வைக்கின்றனர். போலீசாரின் இந்த நூதன முயற்சியால் ஓட்டுநர்களின் தூக்கம் கலைகிறது... இருந்தாலும் வாகன ஓட்டிகள் இந்த "தண்ணியடி வைத்தியத்தை" வேண்டா வெறுப்பாகத்தான் வாங்கிச் செல்கின்றனர்... ஆண்களே இப்படி என்றால், பெண்களாக இருந்தால் மேக்கப் கலைந்து விட்டதென சண்டைக்கே வந்து விடுவார்கள் என்பது தான் உண்மை... ஆனால் போலீசாரின் இத்தகைய நடவடிக்கை பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்