தற்போதைய செய்திகள்

போலீசையே சிக்கவைத்து எஸ்கேப்பான வில்லாதி வில்லி காவலர்களுக்கு விழுந்த தர்ம அடி...

தந்தி டிவி

திருநள்ளாறு சனிபகவான் கோயிலுக்கு வந்திருந்த மதுரை நெல் வியாபாரி கருப்புசாமியின் மனைவி உமாதேவியின் 7 சவரன் தங்கச் சங்கிலி மாயமானது. இதுகுறித்த புகாரில் சி.சி.டி.வி.யை போலீசார் ஆய்வு செய்தபோது, செயினை பறித்தது கோவையைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரியவந்தது. வேறொரு வழக்கில் திருவிடைமருதூர் நீதிமன்றத்திற்கு லட்சுமி வந்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். குழந்தையுடன் இருந்த லட்சுமியை காரில் ஏற்ற முயன்றபோது, தன்னை மானபங்கம் செய்வதாகக் கூறி லட்சுமி கூச்சலிட்டார். மஃப்டியில் இருந்த போலீசாரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து, நீதிபதி முன்பு கொண்டு சென்றனர். தாங்கள் காரைக்கால் போலீசார் என்று கூறியதை ஏற்க மறுத்த நீதிபதி, ஆய்வாளர் வந்தால் விடுவிப்பதாக கூறியுள்ளார். திருநள்ளாறு ஆய்வாளர் அறிவுசெல்வன், விளக்கம் அளித்து போலீசாரை அழைத்து வந்தார். இந்நிலையில், லட்சுமி தனது குழந்தையுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு