தற்போதைய செய்திகள்

5 உயிர்களைக் காவு வாங்கிய கிருஷ்ணா கல்லூரி சுவர் விபத்து - துணை மேயர் பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

கோவை குனியமுத்தூர் அடுத்த மைல்கல் பகுதியில், கிருஷ்ணா கலை,அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியினை சுற்றி, பிரம்மாண்டமான புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பழைய சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் சுவர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு தொழிலாளர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் சீனிவாசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்து நடைபெற்ற பகுதியில், கோவை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேசிய துணை மேயர், சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்பது தொடர்பாக 2 மாதங்களுக்கு முன்னரே கல்லூரி நிர்வாகத்தை எச்சரித்ததாகவும், ஆனால் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு