தற்போதைய செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : இறுதிகட்டத்தை நெருங்கும் விசாரணை | kodanadu

தந்தி டிவி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இது தொடர்பான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் அஜரான நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு தகவல் பரிமாற்ற ஆதாரங்களை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். மேலும் புலன் விசாரணை நடைபெற்று வருவதால் ஆய்வு முடிவுகள் வரும்வரை கால அவகாசம் தேவைப்படுவதாகவும், விசாரணைக்காக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர். சிபிசிஐடி போலீசாரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்