தற்போதைய செய்திகள்

மது அருந்தியதால் கிட்னி செயலிழப்பு... அறுவை சிகிச்சைக்கு பயந்து கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு - செங்கல்பட்டில் அதிர்ச்சி

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கூலி வேலை செய்து வரும் அருண்குமார், தினமும் மது அருந்துவதை பழக்கமாக கொண்டு உள்ளார். சில தினங்களூக்கு முன் உடல்நிலை பாதிப்படைந்த அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஒரு கிட்னி செயல் இழந்துவிட்டதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு பயந்து போன அருண்குமார் வீட்டிற்க்கு வந்து, அழுது புலம்பிய நிலையில், அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த பாலூர் போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி