• கேரள மாநிலம் இடுக்கி அருகே, மருமகன் கத்தியால் தாக்கியதில் மாமியார் உயிரிழந்தார்.
• வாத்திக்குடி பகுதியை சேர்ந்த சுதீஷ் என்பவர் மதுபோதையில் மாமனார் பாஸ்கரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் குத்தியதாக தெரிகிறது.
• இதை பார்த்த மாமியார் ராஜம்மா, தடுக்க முயன்ற போது அவரது கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு சுதீஷ் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
• இதில், ராஜம்மா உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த பாஸ்கரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
• சம்பவ இடத்துக்கு விரைந்த முறிகச்சேரி போலீசார், தப்பியோடிய சுதீஷ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.