தற்போதைய செய்திகள்

"இதுக்கு மேலயும் என்னால முடியாது" - 9வது மாடியிலிருந்து குதித்த கேரள NIT மாணவன்

தந்தி டிவி

ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததாகக் கூறப்படும் கல்லூரி மாணவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் என்.ஐ.டி-யில், தெலுங்கானாவைச் சேர்ந்த யஷ்வந்த் என்ற மாணவர் பயின்று வந்தார். இவர், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில், அதில் பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அம்மாணவர் கல்லூரி விடுதியின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும், மாணவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?