தற்போதைய செய்திகள்

"அம்மா என்னை தூக்கு மா"...மேடையில் செல்ல பிள்ளை செய்த செயல்...பேச முடியாமல் திணறிய ஆட்சியர்

தந்தி டிவி

சர்வதேச திரைப்பட நிகழ்வில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆசியரிடம், மேடையில் அவரது செல்ல மகன் சுட்டித்தனம் செய்த வீடியோ சர்ச்சியாகியுள்ளது.

பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியராக இருக்கும் திவ்யா ஐயர், சர்வதேச திரைப்பட விழாவில் தனது மகனுடன் பங்கேற்றார்.

மேடையில் திவ்யா ஐயர் பேசிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற குழந்தை, தன்னை தூக்கும்படி கூறியுள்ளது.

உடனே மகனை தூக்கி கொண்டு ஆட்சியர் பேசிய போது, செல்ல பிள்ளையின் சேட்டையால் அவர் தனது பேச்சை தொடர முடியாமல் தடுமாறினார்.

ஆட்சியரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும், விமர்சனங்கள் எழுந்தன.

அதற்கு, ஐ.நா.வுக்கு குழந்தையுடன் சென்று பெண்கள் உரையாற்றியதை சுட்டிக்காட்டிய திவ்யா ஐயர், விடுமுறை நாள் என்பதால் தன்னுடன் மகனை அழைத்து சென்றது எந்த வகையில் தவறாகும் என கேள்வி எழுப்பியுள்ளார். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்