• திருவனந்தபுரத்தை சேர்ந்த சஹாத் பெண்ணாக பிறந்து ஆணாகவும், மலப்புரத்தை சேர்ந்த ஜியா பவல் ஆணாக பிறந்து பெண்ணாகவும் மாறினர்.
• இதையடுத்து இருவரும் கோழிக்கோட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.
• இவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என நினைத்து, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, சிசேரியன் மூலம் கடந்த மாதம் 8ஆம் தேதி பெண் குழந்தையை பெற்றனர்.
• இதன் மூலம் இந்தியாவில் குழந்தையை பெற்றெடுக்கும், முதல் மூன்றாம் பாலினத்தவர் என்ற பெருமையை பெற்றனர்.
• இந்நிலையில், சஹாத் மற்றும் சியா தம்பதி, அவர்களது குழந்தைக்கு சபியா சஹாத் என பெயரிட்டுள்ள நிலையில், அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.