தற்போதைய செய்திகள்

பணக்காரர்கள் தான் குறி... கேரள எல்லையில் மாட்டிய இளைஞர்கள் - சிக்கிய வீரியமிக்க போதைப்பொருள்

தந்தி டிவி
• தென்காசியில் இருந்து கேரள மாநிலம் புனலூருக்கு சென்ற கேரளா அரசு பேருந்தை நிறுத்தி, அதில் உள்ள பயணிகளை போலீசார் சோதனை செய்தனர். • அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 2 இளைஞர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 32 கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ. என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. • அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். • அதில், கேரள மாநிலம் காசர்கோட்டை பகுதியை சேர்ந்த முகமது மற்றும் இம்ரான் என தெரியவந்தது. • மேலும், பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை, ஒரு கிராம் 10 ஆயிரம் ரூபாய் என, வசதி படைத்த நபர்களை குறிவைத்து விற்பனை செய்ய இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. • கைதான இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு