தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை - இலங்கை அரசு எச்சரிக்கை

தந்தி டிவி

போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம், நச்சுப்பொருள், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

5 கிராமிற்கு அதிகமாக ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது அப்போதை பொருளை விற்பனை செய்தாலோ மரண தண்டனை வரை விதிக்கக்கூடிய வகையில் கொண்டுவரப்பட்ட அச்சட்டம், தற்போது அமலுக்கு வந்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

பள்ளி குழந்தைகள் 5 கிராமுக்கு அதிகமாக ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தால், அவர்கள் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட வாய்ப்பிருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை