தற்போதைய செய்திகள்

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிரான கே.சி.பழனிசாமியின் மனு..தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

தந்தி டிவி

அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய கே.சி.பழனிசாமியின் மனுவை உச்சநீதீமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 2017, செப்டம்பர் 12ம் தேதி பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும் என கே.சி. பழனிசாமி கடந்த 2019ம் ஆண்டு ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 18ம் தேதி வழக்கை முடித்து வைத்தது. இதனிடைய இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்த ரிட் மனுவை முன்னெடுக்க விரும்பவில்லை என தெரிவித்ததை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் அவரது ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை