தற்போதைய செய்திகள்

கரூர் ரெய்டு.. சோபனாவிடம் பல கட்ட விசாரணை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

தந்தி டிவி

கரூரில் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் அலுவலகத்தில் பணிபுரியும் கரூர், வடக்கு காந்தி கிராமம் பகுதியில் உள்ள சோபனா- பிரேம்குமார் இல்லத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல், வருமான வரி சோதனை நடைபெற்றது. ஆறு நாட்கள் நடைபெற்ற சோதனையில் சோபனாவிடம் பலகட்ட விசாரணைகள் நடைபெற்றன. இந்நிலையில், சோதனை முடிவடைந்து விட்டதாக அதிகாரிகள் நேற்றிரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு அளித்து வந்த பாதுகாப்பையும் விலக்கிக் கொள்ளுமாறு, காவல்துறை உயர் அதிகாரிகளை வருமானவரித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதற்கு இணங்க காவல் துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது பல முக்கிய ஆதாரங்களை வருமான வரித் துறை கைப்பற்றி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"