தற்போதைய செய்திகள்

தோப்பில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்..பின்னணியில் 'சொந்த ரத்தமா'..?கரூரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

மாயனூர் அடுத்த ராசாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சகோதரர்களான கருப்பண்ணன் மற்றும் காத்தவராயன் ஆகியோருக்கு இடையே, நிலம் சம்பந்தமாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தோட்டத்திற்கு தண்ணீர் விடுவதாக கூறிவிட்டு கருப்பண்ணன் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில், தோட்டத்திற்கு அருகே, அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள், கருப்பண்ணனை அவரது தம்பி காத்தவராயன் எரித்து கொலை செய்ததாக போராட்டம் நடத்தினர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்