தற்போதைய செய்திகள்

தோப்பில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்..பின்னணியில் 'சொந்த ரத்தமா'..?கரூரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

மாயனூர் அடுத்த ராசாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சகோதரர்களான கருப்பண்ணன் மற்றும் காத்தவராயன் ஆகியோருக்கு இடையே, நிலம் சம்பந்தமாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தோட்டத்திற்கு தண்ணீர் விடுவதாக கூறிவிட்டு கருப்பண்ணன் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில், தோட்டத்திற்கு அருகே, அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள், கருப்பண்ணனை அவரது தம்பி காத்தவராயன் எரித்து கொலை செய்ததாக போராட்டம் நடத்தினர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"