• கரூர் மாவட்டம் ஆர்.புதுக்கோட்டை பகுதியில் மதுபானம் ஏற்றிச்சென்ற வேன் விபத்தில் சிக்கியது.
• முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
• வாகனத்தில் 20 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் இருந்த நிலையில், மதுப்பிரியர்கள் சிலர் பாட்டில்களை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளனர்.
• பின்னர், அங்கு வந்த மாயனூர் போலீசார், அனைவரையும் விரட்டி அடித்துள்ளனர்.
• இந்த விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருடு மற்றும் உடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.