• கரூர் அருகே தந்தை இறந்து நிலையில் மகன் பிளஸ் டூ தேர்வு எழுதி விட்டு பின்னர் இறுதி சடங்கில் பங்கேற்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
• கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் ஊராட்சி எழுதுயாம்பட்டி சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென இறந்து போனார்.
• இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர்.
• ஆறுமுகத்தின் மகன் நந்தா பிளஸ் டூ படித்து வரும் நிலையில் தந்தை உயிரிழந்த சோகத்தில் வேதனையுடன் தேர்வு எழுதினார்.
• பின்னர் வீடு திரும்பிய நந்தா தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.
• இது உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.