• திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும், அக்ஷரா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
• இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
• இந்த நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில், காதல் ஜோடி அறை எடுத்து தங்கியுள்ளது.
• அப்போது, அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்கவே, ஊழியர்கள் கதவை திறந்துள்ளனர். அப்போது காதல் ஜோடி இருவரும் கை, கழுத்து பகுதிகளில் கத்தியால் அறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
• பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
• இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.