தற்போதைய செய்திகள்

கிழித்தவனுக்கு நன்றி சொல்லி பேனர்..அதையும் கிழித்த அடாவடி பாய்ஸ் - நொந்து போன பாஜக நிர்வாகி

தந்தி டிவி

காரைக்காலில் கோயில் விழாவுக்காக பா.ஜ.க நிர்வாகி வைத்த பிளக்ஸ் பேனர்களை மர்ம நபர்கள் மீண்டும் மீண்டும் கிழித்ததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். காரைக்கால் நெடுங்காடு பகுதியில் உள்ள மனோன்மணி மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அப்பகுதியை சேர்ந்த பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அதிபன், நெடுங்காடு பிரதான சாலையில் பிளக்ஸ் பேனர் வைத்தார். இதனை மர்ம நபர்கள் கிழித்ததால், மீண்டும் அதே இடத்தில் வேறொரு பிளக்ஸ் வைத்தார். அதனையும் மர்ம நபர்கள் கிழித்தெறிந்ததால், வெறுப்படைந்த பா.ஜ.க. நிர்வாகி,

பேனரை கிழித்த நண்பர்களுக்கு நன்றி என்றுகூறி மீண்டும் பிளக்ஸ் வைத்தார். அதனையும் மர்ம நபர்கள் கிழித்ததால், இதற்கு மேல் தன்னை சோதிக்க வேண்டாம் என்பதுபோல் மிகவும் நொந்துபோன நிலையில் காணப்பட்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்