தற்போதைய செய்திகள்

கிழித்தவனுக்கு நன்றி சொல்லி பேனர்..அதையும் கிழித்த அடாவடி பாய்ஸ் - நொந்து போன பாஜக நிர்வாகி

தந்தி டிவி

காரைக்காலில் கோயில் விழாவுக்காக பா.ஜ.க நிர்வாகி வைத்த பிளக்ஸ் பேனர்களை மர்ம நபர்கள் மீண்டும் மீண்டும் கிழித்ததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். காரைக்கால் நெடுங்காடு பகுதியில் உள்ள மனோன்மணி மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அப்பகுதியை சேர்ந்த பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அதிபன், நெடுங்காடு பிரதான சாலையில் பிளக்ஸ் பேனர் வைத்தார். இதனை மர்ம நபர்கள் கிழித்ததால், மீண்டும் அதே இடத்தில் வேறொரு பிளக்ஸ் வைத்தார். அதனையும் மர்ம நபர்கள் கிழித்தெறிந்ததால், வெறுப்படைந்த பா.ஜ.க. நிர்வாகி,

பேனரை கிழித்த நண்பர்களுக்கு நன்றி என்றுகூறி மீண்டும் பிளக்ஸ் வைத்தார். அதனையும் மர்ம நபர்கள் கிழித்ததால், இதற்கு மேல் தன்னை சோதிக்க வேண்டாம் என்பதுபோல் மிகவும் நொந்துபோன நிலையில் காணப்பட்டார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே