• கன்னியாகுமரி அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாலிபருக்கு மாட்டு சாணி அபிஷேகம் செய்த வீடியோ, வைரலாகி வருகிறது.
• சாமிதோப்பு, அருகே உள்ள செட்டிவிளை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், தனது நண்பருக்கு பிறந்த நாள் கொண்டாடினர்.
• தெருவிளக்கு வெளிச்சத்தில் ஒரு ஸ்டூலை போட்டு, அதில் கேக்கை வைத்து மெழுகுவர்த்திகளையும் ஏற்றினார்கள்.
• மாப்பிளே... கேக்கை வெட்டுடா என்றதும், அவரும் மகிழ்ச்சியுடன் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, கேக்கை வெட்டினார்.
• அப்போது, அவர் மீது சரமாரியாக முட்டைகள் எடுத்து வீசினர். அதோடு மறைத்து வைத்திருந்த மாட்டுச் சாணக் கரைசலை எடுத்தும், அவர் மீது ஊற்றினர்.
• பின்னர் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து ஆட்டமும் போட்டனர்.
• இதை செல்லில் பதிவு செய்த நண்பர்களில் ஒருவர் இணையத்தில் பதிவேற்றி உள்ளார்.
• இது வைரலாகி வருகின்றது.