தற்போதைய செய்திகள்

நள்ளிரவில் திடீரென கதவை தட்டும் சத்தம்... திறந்து பார்த்த உரிமையாளருக்கு கத்தி குத்து - அதிர்ச்சி பின்னணி..!

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம், வலியவிளைகாலணி பகுதியில் ரெத்தினராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், கதவை திறந்த ரெத்தினராஜ் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அபின் மற்றும் காட்வின் ஆகிய ஒருவரும் வீட்டின் அருகே நின்றதால், அவர்களிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும், ரெத்தினராஜை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்திவிட்டுச் சென்றனர். இதையடுத்து, ரெத்தினராஜை அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் போலீசாரிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்