தற்போதைய செய்திகள்

நள்ளிரவில் திடீரென கதவை தட்டும் சத்தம்... திறந்து பார்த்த உரிமையாளருக்கு கத்தி குத்து - அதிர்ச்சி பின்னணி..!

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம், வலியவிளைகாலணி பகுதியில் ரெத்தினராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், கதவை திறந்த ரெத்தினராஜ் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அபின் மற்றும் காட்வின் ஆகிய ஒருவரும் வீட்டின் அருகே நின்றதால், அவர்களிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும், ரெத்தினராஜை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்திவிட்டுச் சென்றனர். இதையடுத்து, ரெத்தினராஜை அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் போலீசாரிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை