தற்போதைய செய்திகள்

தகாத உறவை முறித்துக் கொண்ட பெண்... கழுத்தை அறுத்து சாகத் துணிந்த இளைஞர் - குமரியில் பரபரப்பு

தந்தி டிவி

கன்னியாகுமரியில் தகாத உறவை இளம்பெண் முறித்துக் கொண்டதால், இளைஞர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கன்னியாகுமரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவரின் மனைவியும் கடந்த சில மாதங்களாக ஒன்றாக வசித்து வந்த நிலையில், அந்தப் பெண்ணை கண்ணன் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப்பெண் போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு கண்ணனிடம் போலீசார் கூறியிருந்தனர். இந்நிலையில், நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்ணன் திடீரென கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்